அறியாவயதில் அளவின்றி
அடம்பிடித்து
அப்பாவிடம் அடி வாங்கி
அழுதழுது தேம்பிய நாட்களில்
மறதி ஒரு வரம் தான்!!!
நண்பனுடன் முரண்பட்டு
பல நாட்களின் பின் மீண்டும்
பழகும் போதும்
மறதி ஒரு வரம் தான்!!!
காதலியிடம் செருப்படி வாங்கி
கவிழ்ந்திருந்து அழுத நாட்களில்
மறதி ஒரு வரம் தான்!!!
மறந்திருக்காவிடின்
நமக்கு ஏது சாகுந்தலம்?
மறதி ஒரு வரம் தான்!!!
நினைக்கவும் முடியாமல்
சில நிகழ்வுகள்!!
பிரியும் போது தான்
புரியும்!!!
ஏதோ புரிகிறது!!!
கடலுக்கென்ன எல்லை
யார் சொன்னது???
காற்றுக்கும் வேலியுண்டு
பலமான முள் வேலி!!!
சிக்கிக்கொண்ட சருகுகளாய்!!!